வியாழன், 29 பிப்ரவரி, 2024

விரும்பும் வாழ்க்கைத் துணையை அளிக்கும் திருநின்ற நாராயண பெருமாள்


 


விருதுநகர் மாவட்டம் திருத்தங்கலில் உள்ளத தொன்மை வாய்ந்த திருநின்ற நாராயண பெருமாள் கோவில் உள்ளது.விரும்பும் வாழ்க்கைத் துணையை அடைய விரும்புபவர்கள் திருநின்ற நாராயண பெருமாளை வேண்டி வணங்கினால் பிரார்த்தனை நிறைவேறும்.

திருமணத் தடை உள்ளவர்கள் பெருமாளையும், தாயாரையும் தொடர்ந்து வணங்கினால் திருமணம் நடைபெறும்என்பது நம்பிக்கை. வேண்டுதல் நிறைவேறிய பக்தர்கள் பெருமாளுக்கு பரிவட்டம் சாற்றி வழிபடுகின்றனர். சிலர் பெருமாளுக்கும், தாயாருக்கும் திருமஞ்சனம் செய்தும், புளியோதரை படைத்தும் நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.

சித்ரா பவுர்ணமி, வைகாசி வசந்தோற்சவம், ஆனி பிரமோற்சவம், ஆவணி பவித்ரோற்சவம், புரட்டாசி கருட சேவை, பங்குனி திருக்கல்யாண உற்சவம் ஆகிய விழாக்கள் இக்கோயிலில் விமரிசையாக கொண்டாடப்படுகின்றன.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஈரோடு மாவட்டத்தில் தடகளப் போட்டிகள் - வீரர் வீராங்கனைகளுக்கு அழைப்பு..!

  ஈரோடு மாவட்டத்தில் நடைபெற உள்ள தடகள போட்டியில் பங்கேற்க வீராங்கனையருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்திய தடகள சங்கம், இந்திய விளையாட்ட...