புதன், 19 நவம்பர், 2025

ஜம்பை அருகே வீட்டில் தீ விபத்து...!



பவானி 

ஈரோடு மாவட்டம் பவானி அருகே உள்ள ஜம்பை நல்லிபாளையத்தை சேர்ந்தவர் மூர்த்தி (45) இவர் கூலித் தொழிலாளி ஆவார். இவர் வேலைக்கு சென்று விட் டார். வீட்டில் இருந்த இவருடைய தாயார் சமையல் செய்வ தற்காக கியாஸ் அடுப்பை பற்ற வைத்தார். அப்போது திடீரென தீப்பிடித்து குடிசையில் பரவியது. மூர்த்தியின்  தாயார் வெளியே ஓடி வந்தார். இது குறித்து பவானி தீயணைப்பு துறை நிலை அலுவலர் பழனிச்சாமி தலைமையில் சென்றனர். அந்த குடிசைக்கு தண்ணீரை பீச்சடித்து ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். வீட்டில் இருந்த 2 பவுன் நகை பணம் தீயில் எரிந்து நாசமானது. கியாஸ் கசிவு காரணமாக இந்த விபத்து என்பதை இருக்கலாம் என தீயணைப்பு வீரர்கள் தெரிவித்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஈரோடு மாவட்டத்தில் தடகளப் போட்டிகள் - வீரர் வீராங்கனைகளுக்கு அழைப்பு..!

  ஈரோடு மாவட்டத்தில் நடைபெற உள்ள தடகள போட்டியில் பங்கேற்க வீராங்கனையருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்திய தடகள சங்கம், இந்திய விளையாட்ட...